இன்னும் எத்தனை உயிர்களை வாங்கப் போகிறது பட்டாசு ஆலைகள்?

by Staff / 09-05-2024 05:08:26pm
இன்னும் எத்தனை உயிர்களை வாங்கப் போகிறது பட்டாசு ஆலைகள்?

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் மும்மரமாக நடந்து வருகிறது. பட்டாசு தயாரிப்பவர்களுக்கு முறையான பாதுகாப்பின்மை, தீ ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் ஆபத்தான முறையில் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வருடா வருடம் ஏற்படும் தீ விபத்தில் பல உயிர்கள் இறப்பது வாடிக்கையாகி இருக்கிறது. இந்த நிலை என்றைக்கு மாறுமோ? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via