ஊத்தங்கரை அருகே பரபரப்பு பிளஸ் டூ மாணவன் ஹாஸ்டலில் தற்கொலை

by Editor / 07-08-2022 08:58:51am
ஊத்தங்கரை அருகே பரபரப்பு பிளஸ் டூ மாணவன் ஹாஸ்டலில்  தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் டூ மாணவன் அரசு விடுதியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தொட்டமடுவு  பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் வயது 17  இந்த மாணவர் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் பிளஸ் டூ படித்து வருகிறார். இரவு 9 மணி அளவில் கேபிள் வயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த உடன்  ஊத்தங்கரை போலீசார் மற்றும்  டிஎஸ்பி அமல அட்வின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைமேற்கொண்டனர்..
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது ஆதரவாளரும் பாதுகாப்பாளருமான தாத்தா மரணம் அடைந்ததை அடுத்து மனவிரக்த்தியில் காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும்,அவன் இரண்டுமுறையும்  காப்பாற்றபட்டதாகவும்,நேற்று அறையில் யாரும் இல்லாத போது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உடலை மீட்டு  ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த விடுதியில் போலீசார் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று காலை  வீடியோ பதிவுடன் 3 மருத்துவர்கள் அவனது உடலை உடற்கூறு பரிசோதனை செய்ய உள்ளனர்.

 

Tags : A student committed suicide by hanging himself in the hostel of Samsonru Plus Two near Uthankarai

Share via