விஷம் அருந்திய ஜோதிடர் பலி

by Editor / 09-08-2022 03:23:11pm
விஷம் அருந்திய ஜோதிடர் பலி

கோவை-குடும்பத்துடன் விஷம் குடித்த கோவை ஜோதிடர் பிரசன்னா, சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னா, 41; ஜோதிடர். இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவில் மாநில துணைத்தலைவராக இருந்தார்.இவர் மீது, சென்னையை சேர்ந்த கருப்பையா என்ற டிராவல்ஸ் உரிமையாளர், 15 சவரன், 25 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

மன உளைச்சல் அடைந்த பிரசன்னா, 'வீடியோ'வில் வாக்குமூலம் பதிவு செய்து, குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில் பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி அதே நாளில் இறந்தார்.மூன்று நாட்கள் சிகிச்சை பலனின்றி, பிரசன்னா நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தார். அவரது மனைவி அஸ்வினி மற்றும் 8 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

 

Tags :

Share via