கச்சத்தீவை விட்டுக்கொடுத்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஓட்டுக்கேட்டு வருகிறார் தங்கத்தமிழ்செல்வன். சீமான் குற்றம் சாட்டினார். 

by Editor / 01-04-2024 11:53:43pm
கச்சத்தீவை விட்டுக்கொடுத்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஓட்டுக்கேட்டு வருகிறார் தங்கத்தமிழ்செல்வன். சீமான் குற்றம் சாட்டினார். 

தேனி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.முன்னதாக உசிலம்பட்டியிலுள்ள தேவர் சிலை மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்பொழுது கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாண்டியன் தன்னுடைய சிறு சேமிப்பு பணம் ரூ.9230ஐ கட்சி நிதிக்காக சீமானிடம் ஒப்படைத்தார்.பின் 1982 முதல் அதிமுக கட்சியிலிருந்த வழக்கறிஞர் பிரிவு தலைவராக சொக்கநாதன் அக்கட்சியிலிருந்து வலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.பின் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் திறந்தவெளி வேனில் நின்றபடியே வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய அவர்.
இந்திய நாடாளுமன்றத்திலேயே அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் கச்சத்தீவை எடுத்துக் கொடுக்கிற போது எழுந்து நின்று சிங்கமாக கர்ஜித்த  சிங்கம் மூக்கையா தேவர் மட்டும்தான்.அவருடைய தாத்தா காஷ்மீரில் ஒரு பகுதியை எடுத்து சீனாவுக்கு கொடுத்து வரலாற்றிலேயே பெரும் தவறு செய்தது போல நீங்கள் எங்கள் நிலத்தில் ஒரு பகுதியே இலங்கைக்கு கொடுத்து வரலாற்றில் பெருந்தவரை செய்துவிட்டார்கள்.
 தமிழக மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். வரலாற்றில் துரோகி என்று தான் உங்களை பதிவு செய்வார்கள.; இன்றைக்கு அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். கச்சத்தீவை எடுத்துக் கொடுத்து நம் வாழ்வுரிமையை பறித்த காங்கிரஸ் கட்சியை எடுத்ததை திருப்பி எடுக்க முடியாது என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு அந்த கட்சி தீவில் மீட்க போராடுகிறேன் என்று ஒரு கபட நாடகத்தை நடத்தி நம்முடைய ஓட்டை பறிக்க வருகிறார்
நமது இனத்தாரை தவிக்க வைத்து கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கின்றது திமுக. தங்கம் என பெயர் பெயரில் இருந்தால் பத்தாது தங்கமாகவும் குணத்தில் சிங்கமாகவும் இருக்க வேண்டும் தமிழ்ச்செல்வன் என பெயர் வைத்துக் கொண்டு தமிழ் இனத்தை கொன்று குவித்த துரோகிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கிறார் இதைவிட வரலாற்றில் பெரும் துரோகம் ஏதாவது உண்டா பதவிக்காக எதையும் செய்யலாம் என்று இதை நீங்கள் அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழின் பரம்பரைக்கு கிடையாது என்பதே நீங்கள் உள்வாங்கவில்லையா.இப்பகுதியிலுள்ள 58 கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம். அடுத்ததாக டிம்சி டிஎன்டி.இன்றைக்கு ஸ்டாலின் புதியதாக இந்த பிரச்சனை இருப்பது போல பேசி வருகிறார்.இந்த 63 சாதியை நம்மோடு இணைத்தது கலைஞர் கருணாநிதி தான் . என் தம்பியை வெல்ல வைத்து இந்திய நாடாளுமன்றத்திற்கு போய் இதே ஒலிவாங்கி பேச உங்கள் குரலாக உங்கள் உரிமைக்காக ஓங்கி முழங்கச் செய்யுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.

 

Tags : கச்சத்தீவை விட்டுக்கொடுத்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஓட்டுக்கேட்டு வருகிறார் தங்கத்தமிழ்செல்வன். சீமான் குற்றம் சாட்டினார். 

Share via