ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். பின்பு தமிழகம் திரும்பிய உடனேயே அவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதும் விவாதமானது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் ஆளுநர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். தற்போது சில மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை ஆளுநர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது விரைவில் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :