காந்தியைக் கொன்றவர்கள் என்னை விடுவார்களா முன்னாள் முதல்வர் பரபரப்பு பேச்சு

by Editor / 20-08-2022 03:04:12pm
காந்தியைக் கொன்றவர்கள் என்னை விடுவார்களா முன்னாள் முதல்வர் பரபரப்பு பேச்சு

 கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். காந்தியைக் கொன்றவர்கள் என்னை சும்மா விடுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதியவரை வீர் சாவர்க்கர் என்று அழைக்கிறார்கள். சாவர்க்கர் மீது தனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. ஆனால், சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் செய்த செயல்களை ஏற்க முடியாது என்றும் சித்தராமையா கூறினார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டது குறித்து சித்தராமையா கடந்த நாள் கேள்வி எழுப்பினார். மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும் சித்தராமையா குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, அப்போது சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் வந்தது.கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via