தொடர்ந்து பெய்த கன மழையால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ரயில்வே மேம்பாலம்

by Editor / 20-08-2022 03:38:18pm
 தொடர்ந்து பெய்த கன மழையால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ரயில்வே மேம்பாலம்

இமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மெகா வெடிப்பை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீண்டும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சல பிரதேசத்தில் குலு சம்பா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தன இதனிடையே தொடர்மழையால் மண்டி  குலு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழையால் மகாதேவ் கோயில் அருகே தமாசா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

 

Tags :

Share via