தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு இரண்டு வாரம் கெடு

by Editor / 09-09-2022 04:29:05pm
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு இரண்டு வாரம் கெடு

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடகோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மதுரையை சேர்ந்த கே.கேஇ ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள், மத்திய அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்கப்படுவதாக கூறி, இந்திய மீனவர்கள் எத்தனை பேர் இலங்கை சிறையில் உள்ளனர். எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து, மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

 

Tags :

Share via