சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை 62 வயது முதியவர் வெறிச்செயல்

by Editor / 10-09-2022 05:14:11pm
 சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை 62 வயது முதியவர் வெறிச்செயல்

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி வெளியில் சென்று விட்டு 11 வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்றார். அப்போது ஏற்கனவே லிப்டில் ஜகத்பூரைச் சேர்ந்த 62 வயதுடைய பானுபிரதாப் ராணா என்ற முதியவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் லிப்டில் சிறுமி ஏறியதை கண்ட முதியவர் சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். பின்னர் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதியானது. இதனைத்தொடர்ந்து முதியவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via