திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு தனி லட்டு பக்தர் வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமென உறுதி.

by Editor / 11-09-2022 09:41:01pm
திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு தனி லட்டு பக்தர் வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமென உறுதி.

திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.அப்போது தொலைபேசி மூலம் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு பதிலளித்து பேசிய  தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்‌.

 

Tags :

Share via