விஷமருந்தி 54 வயதுடைய நபர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுண்ணாம்பூர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய விவசாயி கடந்த சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக பாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலரிந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :