ஹீட்டர் போட்ட சிறுமி பலி!

by Staff / 23-09-2022 05:22:19pm
ஹீட்டர் போட்ட சிறுமி பலி!

திண்டுக்கல்: வடமதுரை அருகே உள்ள ஏ.வி.பட்டியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி, முத்துராணி தம்பதி. இவர்களுக்கு தவதர்ஷினி, வர்ஷினி தேவி, சங்கரி என 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான தவதர்ஷினி 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அவர் குளிப்பதற்காக வீட்டில் ஹீட்டர் போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via