மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து 18ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் !

by Editor / 13-06-2021 07:36:00am
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து  18ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் !

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் மருத்துவர்கள் தேவையற்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அசாம் பீகார் ,மேங்கு வங்கம், டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் டாக்டர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் சட்டைகளில் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via