மாரடைப்பு வந்தால் இப்படியும் காப்பாற்றலாம்

by Editor / 02-10-2022 12:31:24pm
மாரடைப்பு வந்தால் இப்படியும் காப்பாற்றலாம்

டெல்லியில் இருந்து கேரளமாநிலம் கோழிக்கோடு சென்ற ரயிலில் கேசவன், தயா தம்பதியினர்  பயணம் செய்தனர். இந்நிலையில், அந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சென்றபோது, கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி உடனே ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே நிலைய போலீசார் கேசவனுக்கு சிபிஆர் மூலம் முதலுதவி செய்ய உதவினர். தொடர்ந்து அவரது மனைவி கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து  சிகிச்சை அளித்தார். இதனைத்தொடர்ந்து கேசவன் சீராக மூச்சு விட்டார். அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via