விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றாரா நயன்தாரா மா.சுப்பிரமனியன்

by Staff / 10-10-2022 03:37:17pm
விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றாரா நயன்தாரா மா.சுப்பிரமனியன்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார். வாடகை தாய் மூலமாக இந்த குழந்தைகளைப் பெற்று எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமனியனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். திருமணம் ஆகி,கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும். விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என பொது சுகாதாரதுறை மூலம் விளக்கம் கோரப்படும்" என பதிலளித்தார்.

 

Tags :

Share via