கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர் கைது

by Staff / 10-10-2022 05:03:18pm
 கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர் கைது

கோட்டாறு சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் அண்ணா பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூட்டப்பணையை சேர்ந்த ஜோசப் டேனியல் (வயது 19) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப் டேனியலை கைது செய்தனர்.

 

Tags :

Share via