52.4% பாலியல் வழக்குகளில் நன்கு தெரிந்தவர்களே குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்

by Staff / 11-10-2022 12:31:47pm
52.4% பாலியல் வழக்குகளில் நன்கு தெரிந்தவர்களே குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்

கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து பகுப்பாய்வு மேற்கொண்டு இமாசல பிரேதச போலீசார் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன்படி, 52.4% வழக்குகளில் நன்கு தெரிந்தவர்களே குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர, நட்பின் வழியே அறிமுகம் ஆனவர்களால் 24.4%, திருமணம் என்ற பொய்யான வாக்குறுதிகளின் பேரில் 16.9%, லிவிங் டுகெதராக வாழும்போது 4.1% மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் 2 % பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட பல வழக்குகள், சம்பவங்களை நடக்க விடாமல் முன்பே தவிர்க்க கூடிய வகையை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via