துப்புரவு பணியாளர் பலிஉடலை குப்பை லாரியில் எடுத்துச் சென்ற போலீசார்

by Staff / 02-06-2022 04:11:39pm
 துப்புரவு  பணியாளர்  பலிஉடலை  குப்பை லாரியில் எடுத்துச் சென்ற போலீசார்

ஜோத்பூரின் பிரதாப்நகரில் நேற்று பேருந்து மோதிய விபத்தில் குப்பை சேகரிக்கும் நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்சை வரவைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்த குப்பை லாரியிலேயே சடலத்தை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.டி.எம். மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், ராஜஸ்தான் போலீஸாரின் இரக்கமற்ற செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஜோத்பூர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஜோத்பூர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கு  ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via