போராட்டத்தை ஒடுக்க 30,000 கண்ணீர் புகை குண்டுகளுக்கு ஆர்டர்

by Staff / 17-02-2024 04:01:46pm
போராட்டத்தை ஒடுக்க 30,000 கண்ணீர் புகை குண்டுகளுக்கு ஆர்டர்

டெல்லியிலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக விவசாயிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல் துறையால் 30,000 கண்ணீர் புகை குண்டுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via