பட்டாசு ஆலை விபத்து - முதலவர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 17-02-2024 04:05:51pm
பட்டாசு ஆலை விபத்து - முதலவர்  3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள பாட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபத்திற்கு இரங்கல் தெரிவித்து, 10 பேரின் குடும்பத்துக்கும் தலா ₹3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via