பிபின் ராவத்,மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு.

by Editor / 08-12-2021 06:15:55pm
பிபின் ராவத்,மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக  அதிகாரபூர்வ அறிவிப்பு.

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இந்த கல்லூரியில் இன்று நடக்கவிருந்த ராணுவ பயிற்சி  கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில்  11.47 மணியளவில் வெலிங்டன் நோக்கி புறப்பட்டனர்.

ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது , பிற்பகல் 12:30 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில்  மோதி விழுந்து எரிந்தது. இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக ராணுவத்தின் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிபின் ராவத்,மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக  அதிகாரபூர்வ அறிவிப்பு.
 

Tags :

Share via