அதிமுக ஆட்சிக்காலம் மக்களுக்கு சிறப்பான ஆட்சியாக இருந்தது-ஓபிஎஸ்

by Editor / 14-02-2022 11:04:36pm
அதிமுக ஆட்சிக்காலம் மக்களுக்கு சிறப்பான ஆட்சியாக இருந்தது-ஓபிஎஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அவர் அங்கு குடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:

தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகளுக்கு  தேர்தல் நடக்கிறது. அதில் 19 கூட்டம் நடைபெற்றது. ஆனால் இன்று இங்கு நடப்பது மாநாடு போல் உள்ளது. அனைத்து கூட்டத்திலும், கன்னியாகுமரி கூட்டம் வரலாறு படைத்துள்ளது. 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைத்த இயக்கம் அதிமுக.
2011, 2016 இரண்டு தேர்தல்களிலும்  கூறிய தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்தவர் அம்மா. 
பெண்கல்வியை  ஊக்குவித்தவர், தாலிக்கு  தங்கம் என்ற திட்டத்தினை கொண்டு வந்தவர் அம்மா.
 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி அதிமுக ஆட்சி. 

2021 ல் அதிமுக வெல்லும் என்கிற நல்ல சூழல் அமைந்திருந்த்து. ஆனால் பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் சொல்லி வெற்றி பெற்று விட்டார்கள். ஓட்டு  செலுத்திய மக்களுக்கு நாமம்.
நீட் ரத்து செய்யப்படும் என கூறுகின்றனர். யார் நீட்டை ரத்து செய்ய வேண்டும்.?
நீட் ரத்து செய்யப்படும் சொன்னீர்களே செய்தீர்களா, தாய் மார்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறினீர்கள்  கொடுத்தீர்களா., ?   கூட்டுறவு வங்கியில் நகைக்கடன்  ரத்து என்று கூறி ஏமாற்றி விட்டார்கள்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, மிளகு, வெல்லம் அனைத்தும் தரமற்றதாக கொடுத்தார்கள். 5 ஆயிரம் கொடுப்பதாக கூறினார் ஆனால் ஏமாற்றி விட்டார்கள்.


வடநாட்டில்  சென்று பொருட்கள் வாங்கியுள்ளார்கள், நம் ஊரில் இருக்கிறது அண்ணாச்சி கடைகள் ஆனால் இவர்கள் வட நாடு சென்றிருப்பது  ஒரு வித விஞ்ஞான ......? காவிரி நதி நீர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்தவர் அம்மா.

தஞ்சை தரணிக்கு சொந்த கார்ர்கள்  என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது காவிரி ந்திநீர் பிரச்சினை தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

என் வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருந்த நாள், காவிரி நதிநீர் இணைப்பு அரசாணை கொண்டு வந்த தினம். அதை சாத்தியபடுத்தியவர்  அம்மா.30 ஆண்டு காலம் கழகத்தின் ஆட்சிக்கு அச்சாரமாக இருந்தவர்கள் தொண்டர்கள். அவர்கள் பங்கேற்கும் தேர்தல் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல். என்றார்.

 

Tags : The AIADMK regime was a great regime for the people-OPS

Share via