குடிபோதையில் பெண் ஸ்டாலினை அழைக்கவா? என மிரட்டல்.

by Staff / 12-01-2023 01:52:11pm
குடிபோதையில் பெண்  ஸ்டாலினை அழைக்கவா? என மிரட்டல்.

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த பெண்மணி ஒருவர் தனது பணத்தை ஓரமாக படுத்திருந்த நபர் திருடிவிட்டதாக கூறி செருப்பை கொண்டு கடுமையாக தாக்கினார். தகவலறிந்து தடுக்க வந்த போலீசாரிடம் ஸ்டாலினை அழைக்கவா என கெத்து காட்டி பேசி திகைக்க வைத்தார். போலீசார் விசாரணையில் உறங்கி கொண்டிருந்த நபர் பணத்தை திருட வில்லை என்பதும் பெண்மணி போதையில் பேருந்து நிலையத்தை நீண்ட நேரம் சுற்றித் திரிந்தும் தெரியவந்தது. மேலும் அவர் வேதாரண்யத்தை சேர்ந்த பிரியா என்பதும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via