பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில்2 பெண்களை நரபலி கொடுத்த மருத்துவ தம்பதி

by Staff / 11-10-2022 02:53:11pm
 பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில்2 பெண்களை நரபலி கொடுத்த  மருத்துவ தம்பதி

கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்று வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மாவை  பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனா்.. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பத்மாவின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்த பத்மாவின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த போது அந்த செல்போன் ஒருவரிடம் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருவில்லா பகுதியை சேர்ந்த லைலா, பகவந்த் சிங் தம்பதிகளுக்காக பெண்களை நரபலி கொடுத்தது தெரியவந்து. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலடியை சேர்ந்த ரோஸாலி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.  பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மருத்துவ தம்பதி செய்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via