பாலியல் தொழிலில் ஈடுபட்ட இடைத் தரகர் இருவர் கைது

by Staff / 12-10-2022 01:57:57pm
பாலியல் தொழிலில் ஈடுபட்ட இடைத் தரகர் இருவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிகரணை விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.அங்கிருந்த இடைத் தரகரான வினோத்(25), மூர்த்தி(32), ஆகிய இருவரை கைது செய்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம் பெண்கள் மூன்று பேர் மீட்கப்பட்டனர்.விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக வீட்டை வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், பெண்களையும் சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலையூர் போலீசார் இடைத்தரகர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கபட்ட பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக முக்கிய குற்றவாளியான விஜய் என்பவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via