விசிலை விழுங்கியுள்ள குழந்தை பலி

by Staff / 13-10-2022 01:23:31pm
விசிலை விழுங்கியுள்ள குழந்தை பலி

சென்னை பூந்தமல்லி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (38). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா. வர்களுக்கு தர்சன்(3), என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இன்று வழக்கம்போல் வீட்டில் உள்ள விளையாட்டு பொருட்களை வைத்து 1 வயது பெண் குழந்தை விளையாடியது. அப்போது எதிர்பாராதவிதமாக விசிலை விழுங்கியுள்ளது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அக்குழந்தை மயங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயங்கிய குழந்தை தட்டி எழுப்ப முயற்சித்தனர். மேலும், குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடந்தவர்கள், உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via