சாலை விபத்தில் பெண் தலைமைக் காவலர் பலி

by Staff / 02-05-2024 01:42:49pm
சாலை விபத்தில் பெண் தலைமைக் காவலர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும், ஈச்சர் லாரியும் நெருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் தலைமைக் காவலர் அமுதா (39) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எளையம்பாளையம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவுப் பணி முடித்துவிட்டு, ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. இது குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவருடைய உடலுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via