அரியநாயகிபுரம் கிராமத்தில் தொடரும் ஐந்தாம் நாள் போராட்டம் பதற்றமான சூழலில் காவல்துறையினர் குவிப்பு

by Staff / 18-10-2022 01:58:01pm
அரியநாயகிபுரம் கிராமத்தில் தொடரும் ஐந்தாம் நாள் போராட்டம் பதற்றமான சூழலில் காவல்துறையினர் குவிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரிய நாகியாபுரம் கிராமத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக சீனு என்ற பள்ளி மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதின் விவகாரம் தற்பொழுது வரை நீடித்து வருகிறது இன்று ஐந்தாவது நாளாக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இறந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து இன்று ஐந்தாம் நாளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இதனால் அரியனாகிய புறம் மற்றும் வீரசிக மணி சேந்தமரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் நான்கு தினங்களாக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத விதமாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்

 

Tags :

Share via