சிறுவன் அடித்துக் கொலை

by Staff / 22-10-2022 11:36:49am
 சிறுவன் அடித்துக் கொலை

போஜ்பூரைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் தயா குமார்(12) திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலிஸார் சிறுவனை தேடி வந்த நிலையில், சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவந்தது. தயா குமார் படிக்கும் அதே பள்ளியில் அவரது அக்கா 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அக்காவுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ தயா குமார் முடிவெடுத்துள்ளார்.

அதன்படி தேர்வு நடைபெற்ற போது தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயா குமார் பிட் பேப்பரை அக்காவை நோக்கி வீசியுள்ளார். ஆனால் அந்த பேப்பர் அக்காவின் அருகில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மற்றொரு மாணவியின்மேல் விழுந்துள்ளது. அதனை பார்த்த அந்த மாணவி தயா குமார் தனக்கு காதல் கடிதம் கொடுப்பதாக நினைத்து அதே பள்ளியில் படிக்கும் தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து தயா குமாரை தாக்கி அடித்தே கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து போலிஸார் மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via