சென்னை பல்கலை. பாடமாகிறது திருக்குறள்: துணைவேந்தர் அறிவிப்பு

by Editor / 19-06-2021 04:04:19pm
சென்னை பல்கலை. பாடமாகிறது திருக்குறள்: துணைவேந்தர் அறிவிப்பு

 

 

 

சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாகிறது திருக்குறள்: துணைவேந்தர் அறிவிப்பு

திருக்குறளை பாடமாக்க முடிவு செய்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளது தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டில் பாடமாக சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பதும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இளநிலை மாணவர்களுக்கு பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுதிருக்குறளை பாடமாக சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகம் போலவே மற்ற பல்கலைகழகமும் திருக்குறளை பாடமாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு விரைவில் மற்ற பல்கலைக் கழகங்களிலும் திருக்குறள் பாடமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

 

Tags :

Share via