அடுக்குமாடியில் இருந்து குதித்து தற்கொலை

by Staff / 27-10-2022 12:41:53pm
அடுக்குமாடியில் இருந்து  குதித்து தற்கொலை

பாலக்காடு அருகே இல்லத்தரசி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாலக்காடு கடம்கோட் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நென்மாறையைச் சேர்ந்த சுனிதா (54) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தற்கொலை என்றும், வேறு எந்த மர்மமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சுனிதா இன்று அதிகாலை நான்கு மணியளவில் மேல் மாடியில் இருந்து கீழே குதித்தார். காலையில் சத்தம் கேட்டு வந்த காவலாளிதான் முதலில் பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார்.
சுனிதா மேல் தளத்தில் இருந்து குதிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. உயிரிழந்த சுனிதா தனது மகளுடன் பல வருடங்களாக இங்கு வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via