கார் டிரைவர் செய்த தவறால் ரூ.20ஆயிரம் இழப்பீடு

by Staff / 31-10-2022 12:34:29pm
கார் டிரைவர் செய்த தவறால் ரூ.20ஆயிரம் இழப்பீடு

டோம்பிவிலியை சேர்ந்தவர் கவிதா சர்மா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனியார் வாடகை கார் நிறுவனம் மூலம் விமான நிலையத்திற்கு பயணம் செய்தார். அப்போது கார் டிரைவர் அலட்சியமாக ஓட்டியதால் கவிதா சர்மா விமான பயணத்தை தவற விட்டார். இதனால் அவர் இழப்பீடு கேட்டு வாடகை கார் நிறுவனத்திடம் முறையிட்டார். இதற்கு நிறுவனம் தர மறுத்ததால் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாாரணையின் போது டிரைவரின் மீது குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் கவிதா சர்மாவிற்கு தனியார் வாடகை கார் நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via