ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஒத்திவைப்பு

by Staff / 03-11-2022 04:15:30pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்ய கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த வாரம், வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைப்பதாக தீர்ப்பளித்தனர்.

 

Tags :

Share via