2500 ஊழியர்கள் பணி நீக்கம்
பைஜூஸ் ஆன்லைன் கல்வி செயலி நிறுவனம் 2500 ஊழியர்களை கடந்த மாதம் பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து நீக்கப்பட்ட ஊழியர்களிடம் அந்நிறுவனத்தை நிறுவியரும், தலைமை செயலதிகாரியாருமான பைஜூ ரவீந்திரன் மன்னிப்பு கோரினார்.இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களிடம் உண்மையிலேயே மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் வெறும் எண் கிடையாது. நீக்கப்பட்ட 5 சதவீதமும் எனக்கு முக்கியமானவர்கள்.பைஜூஸின் வளர்ச்சியே பிரதானம். கடந்த நிதியாண்டில் ரூ.4,588 கோடி நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல, சில ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த புதிய பதவிகளை உருவாக்க மனித வளத்துறையிடம் உத்தரவிட்டுள்ளேன்” என கூறினார்.
Tags :