திருமண ஆசைகாட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

by Staff / 31-10-2023 05:05:46pm
திருமண ஆசைகாட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் சாகுல் ஹமீது மகன் முகம்மது தாரிக் (எ) முகம்மது நசீர் (21/2020) என்பவர் கடந்த 26. 01. 2020 அன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது தொடர்பாக புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா வழக்குப் பதிந்து அவரை கைது செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று முகம்மது நசீருக்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 50ஆயிரம் அபராதமும் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மாதவ ராமானுஜம் தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் இருந்து அவரது தாயார் விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார்.

 

Tags :

Share via