11-ம் வகுப்பு மாணவி கடத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 26. 10. 22 அன்று நள்ளிரவில் உணவு உண்டு விட்டு தூங்க சென்றவர். காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை இதையடுத்து மாணவியின் தாயார், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்து உள்ளார். ஆனால் மாணவி எங்கு சென்றார் என தெரியவில்லை, இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் குற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தக்கலை பனவிளையை சேர்ந்த ஆகிஷ் செல்வன் (22) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து தனி படை போலீசார் இவர்களை தேடி வந்த நிலையில் போலீசாருக்கு இவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு பார்த்தபோது இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மாணவியை மீட்ட போலீசார் ஆகாஷ் செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :