ஆணவக்கொலைகளுக்கு தனி சட்டம் அவசியம்
தமிழகத்தில் காதல் விவகாரத்தால் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் ஆண்டுக்கு 120 முதல் 150 நடக்கின்றன. ஆனால், சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக அரசிடம் மிகச் சொற்பமான தகவல்களே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பது வேதனையளிக்கிறது.ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், இதற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை.
ஆணவக் கொலைகள் என்பது பிகாரிலோ, உ.பியிலோ, பஞ்சாப்பில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டிலும் அதிகம் நடக்கிறது. இதை, தடுக்க கட்டாயம் தனிச்சட்டம் அவசியம் தேவை. தனிச்சட்டம் இயற்றப்படுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் 50துக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் உள்ளன. இதுதவிர, உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு கட்டாயம் சட்ட பாதுகாப்பு அவசியம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Tags :