ஓபிஎஸ் செல்லாத ரூபாய் நோட்டு. அதிமுக எம்எல்ஏ

by Staff / 12-11-2022 03:41:14pm
ஓபிஎஸ் செல்லாத  ரூபாய் நோட்டு. அதிமுக எம்எல்ஏ

மதுரை திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது.
அதை ஆய்வு செய்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். 30 வாக்கு சாவடிக்கான புதிய வாக்காளர் பட்டியல் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய வகுப்பு கட்டுவதற்கான பணி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தேன்.

நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமர் முன்னிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பில் நடந்தது குறித்த கேள்விக்கு: அரசு பட்டியல்படி அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என வரிசைப்படி ஒரு பட்டியலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து கொடுத்தனர் அந்த வரிசையில் அமைச்சர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் நின்றனர்.

எங்களுடைய 2532 பொது குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம். எங்கள் சட்ட திட்டப்படி கட்சியிலிருந்து ஒருவர் விலக்கப்பட்டால் அவரிடம் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. அந்த அடிப்படையில் தான் 2532 பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் திமுகவுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் விலக்கப்பட்டதால் அவருடன் யாரும் பேசவில்லை,

முகம் பார்த்து கூட சிரிக்கவில்லை, இபிஎஸ்ஸும் சரி, நாங்களும் சரி பரஸ்பரம் வணக்கம் கூட நாங்கள் செலுத்திக் கொள்ளவில்லை.அதேபோல் பிரதமரும் வரிசையில் சந்தித்தார் தவிர வேறு வகையான எந்த ஒரு முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை.எடப்பாடியாரும் மோடியும் சிரித்துக் கொண்டே பேசினார். இபிஎஸ் பிரதமரிடம் ஹவ் ஆர் யூ எனக்கேட்டார் அதற்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்தார்.

நீதிமன்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம் அந்த வகையில் அதிமுக வலிமையோடும், பொழிவோடும் உள்ளது யாருடைய தயவும், துணையும் தேவையில்லை.அதுபோல நாங்கள் யாரோடும் தொடர்பு கொள்ளவில்லை, யாரும் தொடர்பு ஏற்படுத்தவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவரை நாங்கள் கண்ணீர் செல்வமாகத்தான் பார்க்கிறோம்,பசுதோல் போர்த்திய மனிதராக பார்க்கிறோம், செல்லாத ஆயிர ரூபாய் நோட்டாக பார்க்கிறோம் அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை இனியும் இருக்காது அதில் மிகத் தெளிவாக இருக்கிறோம்.நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியோடு வெற்றியை ஈட்டுவோம் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் திமுக மக்கள் விரோத சக்தியாக மக்கள் மத்தியில் ஒதுக்கப்படுகிற சக்தியாக உள்ளது எனவே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.

தனியாக சந்திக்க முயற்சி எடுக்கவில்லை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கூட்டணியில் உள்ளதால் பிரதமரை வரவேற்றார். அப்படி தனியாக சந்தித்தாலும் தமிழகத்திற்கான கோரிக்கையைத் தான் கொடுப்பார். எங்கள் கட்சி வேறு, அவர்கள் கட்சி வேறு அவர்களும் இதில் தலையிட விரும்ப மாட்டார்கள்.

கூட்டணி கட்சி மத்திய அமைச்சர் என்பதால் சந்திக்கிறார்கள். முதல்வரும் தான் சந்திக்கிறார் அதற்காக திமுக பாஜக கூட்டணி என்று சொல்ல முடியுமா அது போல தான் இதுவும். இது மரபு அதுபோல அமித்ஷா கட்சியின் தலைவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார் அவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார். மத்தபடி இணைப்புக்காகவோ, கூட்டணிக்காகவோ எதுவும் கிடையாது.பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கேள்விக்கு: 

அதிமுக ஆட்சியின் போது அம்மாவே களத்தில் இறங்கியுள்ளார் இபிஎஸ் பல்வேறு நிர்வாக திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மாவட்டம் தோறும் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து எங்கெங்கு தண்ணீர் தேங்குமோ அதை அகற்றுவதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்தார்.

இன்று தண்ணீர் நிறைய தேங்கியுள்ளது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது தான் பொதுமக்கள், பத்திரிக்கையாளர் உட்பட பலரும் பள்ளத்தில் விழுந்து இறப்பது மிக அதிகமான செய்தியாக உள்ளது. இதை தவிர்ப்பதற்கு முறையான முயற்சிகளை இந்த அரசு எடுக்கவில்லை இதற்கான முயற்சிகளை எடுத்தால் உயிர் பலியாவதை தடுக்கலாம் என்றார்.

 

Tags :

Share via