மக்கள் கண்ணீரை துடைப்போம் - ஈபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு

by Staff / 12-11-2022 03:45:00pm
மக்கள் கண்ணீரை துடைப்போம் - ஈபிஎஸ் தொண்டர்களுக்கு  அழைப்பு

தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரைத் துடைப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அன்றாட வாழ்விற்கு தேவையான உணவுப்பொருட்கள் கிடைப்பதிலும், அவசர உதவிகள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.இதற்கு திமுக அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறிய அவர், தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

Tags :

Share via