மை டியர் மகளே" என மாணவிகளை ’அழைத்த’ மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்: குற்றப்பத்திரிகை தாக்கல்

by Admin / 28-08-2021 12:54:35pm
மை டியர் மகளே

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக ஆனந்தன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பத்ம ஸ்ரீ சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து, ஆனந்தன் மீதும் ஏராளமான மாணவிகளின் பாலியல் புகார்கள் சமூகவலைதளத்தில் வெளியாகின. இதனை அடிப்படையாக கொண்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தனை கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்ததனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்தன் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தெடர்ந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய மகளிர் போலீசார் ஆசிரியர் ஆனந்தனை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய கீழ்ப்பாக்கம் காவல் நிலைய மகளிர் போலீசார் ஆசிரியர் ஆனந்தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து 27 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முழுமையான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் இந்த குற்றப்பத்திரிகை விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்

 

Tags :

Share via