பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.

by Staff / 14-01-2023 04:52:49pm
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.

பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர், செல்லப்பம்பாளையம், கிழக்குபுதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் சிவகிரியை சேர்ந்த நவீன் குமார் என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திவ்யாவின் குடும்பத்தைச் சேர்ந்த தாய், அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் உடல் நலக்குறைவாய் இறந்து போய்விட்டனர். இதனால் திவ்யா மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதென முடிவு செய்து, கணவரைப் பிரிந்து தந்தை பழனிச்சாமி உடன் கிழக்கு புதூர் காலனியில் வசித்து வருகிறார். ஏற்கனவே குடும்பத்தை இழந்த நிலையில் இருந்த திவ்யா தற்பொழுது கணவரை பிரிந்ததால் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டிலிருந்த செல் பாஸ் விஷ மாத்திரையை தின்றுவிட்டு வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via