மேட்டூர் அருகே டூ வீலர் மெக்கானிக் சடலம். போலீசார் விசாரணை.

by Staff / 15-11-2022 12:28:26pm
மேட்டூர் அருகே டூ வீலர் மெக்கானிக் சடலம். போலீசார் விசாரணை.

மேட்டூர் அடுத்த நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் செங்கோட்டையன் (38). இவருக்கு திருமணமாகி  அம்பிகா (30) என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உண்டு. இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே வந்த செங்கோட்டையன் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை  அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே மழை நீர் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் செங்கோட்டையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via