செப்டம்பர் 1ம் தேதி முதல் அதிரடியாக உயரும் சுங்கக் கட்டணம்.

by Editor / 30-08-2022 04:31:50pm
செப்டம்பர் 1ம் தேதி முதல் அதிரடியாக உயரும்  சுங்கக் கட்டணம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கி.மீ தூரமுள்ள, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 4 வழிச் சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ்வே  பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம்  விக்கிரவாண்டி டோல்கேட்டில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உயர்த்தப்பட உள்ள கட்டண விவரம்- கார், வேன், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு ஒரு வழி கட்டணமாக ஒருமுறை பயணிக்க ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. பல முறை பயணிக்க ரூ.150 ஆக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,660 ஆக இருந்த கட்டணம் தற்போது 385 ரூபாய் உயர்ந்து ரூ.3,045 ஆக உயர்ந்துள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.155 ஆக இருந்த ஒரு வழி கட்டணம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.180 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.235 ஆக இருந்த கட்டணம் ரூ.265 ஆகவும், மாதாந்திர கட்டணம் 4,650- ரூபாயிலிருந்து 680 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.5,330 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து ஒருவழி கட்டணம் ரூ.310 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ,355 ஆகவும், பலமுறை பயணிக்க ரூ.465 ஆக இருந்த கட்டணம் ரூ.535 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.9,305-ல் இருந்து 1,360 ரூபாய் உயர்ந்து ரூ.10,665 ஆகவும் வசூலிக்கப்பட உள்ளது. பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ.1,000 ஆகவும், உள்ளூர் வாகன கட்டணம் வகை ஒன்று மாதாந்திர பாஸ் ரூ.150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ.300 என மாற்றமின்றி வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via