வளர்த்தவரையே கொன்ற ஜல்லிக்கட்டு காளை
திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியில் உள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். செபஸ்தியார் (27) என்பவர் தனது ஜல்லிக்கட்டு காளையை போட்டிக்காக அழைத்து வந்த போது எதிர்பாராத விதமாக காளை அவரை வலுவாக தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :