பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு.
உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி தந்தை மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த 17 வயதான ராஜேஸ்வரி என்கிற பெண்ணை 31.08.2022 பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அதை வீடியோ போட்டோ எடுத்து அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர்.17 வயதான அந்தப் பெண்ணை மிரட்டியதன் அடிப்படையில் மனமுடைந்து அந்தப் பெண் களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். சேலம் மாவட்டம் வீரகனூரில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி சம்பந்தப்பட்ட சிறுமி ராஜேஸ்வரி உயிரிழந்துள்ளார்.. இது தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசாமி மற்றும் மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில்சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராணி ,ராமசாமி, மணி, மாரிமுத்து ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ..
Tags :