கணவனை கொடூரமாக கொன்ற மனைவி

by Staff / 18-11-2022 10:56:35am
கணவனை கொடூரமாக கொன்ற மனைவி

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி. குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி ஜெகன். இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் வினோதினியை மென்பொறியாளரான கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில் மீண்டும் பழைய காதலனுடன் உறவை தொடர்ந்த வினோதினி, கடந்த 2018 ஆண்டு கணவன் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கண்ணை கட்டி விளையாடுவது போல நடித்து அவரை கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வினோதியும், அந்தோணி ஜெகனும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via