அமைச்சர் மீது அரிப்பு பொடியை வீசிய கும்பல்

by Staff / 10-02-2023 02:47:52pm
அமைச்சர் மீது அரிப்பு பொடியை வீசிய கும்பல்

மத்தியப் பிரதேச அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் பாஜகவின் 'விகாஷ்' பயணத்திற்கிடையே தனது சொந்த சட்டமன்றத் தொகுதியில் தாக்குதலுக்கு ஆளானார். ஒரு கிராமத்தின் வழியே நடந்த பயணத்தின் போது, ​​அவர் மீது அரிப்புப் பொடி வீசப்பட்டது. இதனால் உடல் அரிப்பு தாங்க முடியாமல் அவர் ஆடைகளை கழற்றிவிட்டு, தண்ணீரால் பொடியை கழுவும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு, அவர் தனது கைகளையும் முகத்தையும் தண்ணீரில் கழுவி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via