1, 000 லிட்டர் சாராயம் அழிப்பு
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் பீஞ்சமந்தை மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பீஞ்சமந்தை மலையில் பல்வேறு இடங்களில் பேரல்களில் 1, 000 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட அடுப்புகள், அடித்து நொறுக்கப்பட்டன.
Tags :