சிறுமிக்கு பாலியல் தொல்லை:  காவல் உதவி ஆய்வாளர் கைது

by Editor / 25-06-2021 06:43:07pm
  சிறுமிக்கு பாலியல் தொல்லை:   காவல் உதவி ஆய்வாளர் கைது

சென்னை காசிமேடு காவல்நிலையத்தில் தனிப்படை உதவி ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சதீஷ்குமார்.பாதுகாப்புப்பணிக்காக மாதவரத்துக்கு வந்து சென்றபோது, ரேஷன் கடை பெண் பணியாளருடன் சதீஷ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக  வீட்டுக்கும் வந்து சென்ற சதீஷ்குமார், பெண் பணியாளரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாகவும், அவர் மீது பொய் புகார் போட்டு சிறையில் தள்ளப்போவதாகவும் கூறி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சில நபர்களை அழைத்துவந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார். கொடுமைகள் தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் தந்தையிடம் சிறுமி கூறியதையடுத்து, அவரை அடித்து துன்புறுத்திய தாயும், பெரியம்மாவும், காவலர் சதீஷ்குமாரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியிருப்பதாகவும், அவர் கூறியவாறு நடக்குமாறும் துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சிறுமி வாட்ஸ்அப் மூலம் காவல்துறைக்கு புகார் அளித்தார்.இதன்பேரில், சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அதிகார துஷ்பிரயோகம், ஆயுதம் காட்டி மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், பெரியம்மா ஆகியோரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via