பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 12 பேர் காயம்

by Staff / 28-11-2022 01:52:36pm
பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 12 பேர் காயம்

மகாராஷ்டிராவில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். நேற்று மாலை 5 மணியளவில் சந்திராபூரில் உள்ள பல்லார்ஷா ரயில் நிலையத்தில் நடை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து 20 அடி கீழே உள்ள ரயில் பாதையில் விழுந்தது. விபத்தின் போது தண்டவாளத்தில் ரயில்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via